Thursday 31 January 2013

மறவன்............

மறைவிற்குள் நில்லா  மறவன்
மறைவு தேடிச்சொல்லும் கதையென்ன
வரவிற்காய் கூடும்  மறவன்
வரமாய்  எண்ணும் மரவென்ன

கொடிகொடியாய் அறுக்கும் மறவன்
கொடியின் வேரில் தேடுவதென்ன
அடிதடியாய் அலையும்  மறவன்
அழித்த மரவின் கெதியென்ன

பழமைக்குள் புதுமைதேடும் மறவன்
மறவென சொல்லும் கதையென்ன
கட்டுபாட்டை இழந்த  மறவன்
கட்டிக்காக்கும் மரவென்ன

ஒழுக்கத்தை  இழந்த மறவன்
ஒழுக்கமாய் எழுதிடும் மரவென்ன
பெண்ணினத்தை இழிவுபடுத்தும் மறவன்
பெண்ணிற்காய் சொல்லும் மரவென்ன

இரு பாலாய் பிறந்தமறவன்  ஒருபாலுக்காய்
எழுதும்  மரவென்ன
இருட்டிற்குள் மனசை வைத்த மறவன்
வையகதிற்கு சொல்லும் மரவென்ன

வாழும்வரை வரைந்த மரவை
மறவன் இருக்கும் போதேஅழிப்பதென்ன!!
தமிழுக்காய்  சொல்லிச்சொல்லி மறவன்
வாழ்கைக்கு தடையாகி போன மரவென்ன

தடைகளாய் தடையிட்டமரவைவிட்டு
 தடையின்றி வந்திட்ட  மறவன்
தடை தாண்டி கற்று தன்வாழ்விற்காய்
தேடிக்கொண்ட மரவென்ன!1

தலையில்லா மறவனாகி  இன்று
தலைகீழாய் தெறித்தோடும் மறவன்
தவறியபின் தேடியழையும் வாழ்வின்
 கதையின்  மரவென்ன!!

அடிமைக்குள் ஓர்மரபு  !
பாலோடு பால் கலந்து
பாலாகி நிற்பதென்ன
பொறுமையாய் இருந்த மரபு
பொறுமையின்றி போனதென்ன  மண்ணெங்கும்
கொடுமைகளோ மரவாய் ஆனதென்ன!!!!

No comments: