Friday 9 April 2010

இன்ப நாள்....................

மீண்டும்  மீண்டும்    தொட்டு     
விட்டு  விட்டதைச் சொல்லும்  
நாள்! 
விட்டுச் செல்லும்
கெட்டாதிற்கும்   நல்லதிற்கும்       
சாட்சியாய்   ஏறி இறங்கிடா நாளை  
கைகோர்த்திடும் நினைவிற்கு   
சாட்சியாக்கி பாதையாக்கும் நாள்.....  

பதவிக்கு வந்தாலும்
பாதையோரம் கிடத்தாலும்     
கசக்கும் நினைவுகள்
இதயத்தை பிழிந்தாலும்
சிரிக்க நிற்கும் நாள்....

போனால் மாற! மாறினால்
வீழா! வரையறையற்ற நாட்களை
வந்து வந்து சொல்லி நிற்கும் நாள்......

கொண்டு போகும் வரை
சொல்லி களைந்து
மனிதனோடு மொட்டு முதல்
சருகுவரை தரையோடு
இன்பத்தை  தேடும் நாள்
ஒரு நாளோடு மட்டும்
தள்ளாடுது மதுவருந்தும் மனிதனாய்......................

No comments: