Tuesday 14 July 2009

உயிர்த்துடிப்பு............

சொல்லித் திட்டி
திட்டி அடித்து
சொல்லாது வாழ்ந்தாலும்
மனிதர்கள் தேடும் சொந்தம்
இது தான்!!

தூக்கி நிறுத்தி
தூண்டாது போனாலும்
உணர்ச்சி விளையாட
ஒன்றானா இதயங்களால்
உருகும் உடலில் தொலையாய
உணர்வாய் தேடும் சொந்தம்
இது தான்!!

தேடிக்கிடைத்தாலும்
தேடாது வந்தாலும்
சோராது போனாலும்
சேர துடிக்க தேடி தவிக்கும்
சொந்தம் இது தான்!!

காயங்கள் கொடுத்து
காயங்கள் பட்டு
காலங்கள் கடந்தாலும்
தொலைந்த கனவோடு
பேசும் சொந்தம் இது தான்!!

மறக்க நினைந்து
மறந்தே வாழ்ந்தும்!!
மறக்க முடியா மறதியின்
உரிமை செய்தியின் இறுதி
சொந்தம் இது தான்!!

பொய்யான மகிழ்ச்சியில்
மெய்யான நிமிடத்தை
பொய்யாய் தந்தாலும்
மெய்யான உறவின்
பொய்யில்லா பந்தம் இது தான்!!

No comments: