Wednesday 6 February 2013

இரு இதயம்

உன் மகிழ்ச்சிகளில்
நான் தொலைவாகின்றேன்
உன் சோகங்களில்
நான் அருகமர்கின்றேன்
உன் தேவைகளில்
நான்  நீயாகின்றேன்
உன் சோர்வுகளில்
நான் நிழலாகின்றேன்
உன் ஆசைகளில்
தொலைவாகின்றாய்
என் மகிழ்ச்சிகளில்
 துயரங்களாகின்றாய்
என் கனவுகளில்
வேடிக்கையாகின்றாய்
இருந்தும்   நமக்குள் பிணைப்பு!!
நாமாய் நாம் வாழ
ஆண்மையா பெண்மையா
தடையென எண்ணிய
தேடலில்  ஆண்டுகள் கடந்து
மி
ஞ்சியது சொல்லறித இரு இதயமே!!

No comments: