Friday 20 April 2012

உயிர்க்காதல்

உடல் மொழி கண்டு
உணர்வு மொழி பேசுது 
கொண்ட  காதல்!!

வழிவழிபாதைகளில்
காத்து காத்து நிற்குமா 
உயிர்க்காதலை 
வென்ற உணர்வின்
 மொழியாய் சொன்னதென்ன
 கண்டதென்ன சொல்வதென்ன !!

உயிர்க் காதலாகி கருவாகி
அன்னை வயிற்று இருளுக்குள்
உயிராகி  அழும் கரு மொழி 
புரியாக்காதல்
பெற்றோர்ராகி இட்டு கட்டும்
சண்டையினை புரிந்திடா
உணர்வின் காதலாய்  உயிர் கொடுத்து
உயிர்காத்து உயிரழித்திடும்
 உயிர்க்காதலாய் எதைத்தேடி
 எதையெடுத்து எதைசொல்லுது
வாழ்வதற்கு!!

உன்னை என்னை புரியா
 உயிர்க்காதல் இன்னென்றை
புரிந்து உயிரொன சேரத்துடித்து
உயிர்க்காதலாய் கற்று தந்த
 உடல்மொழி த் தேடலின்
உடல்கள் மட்டும் புரிந்த வாழ்வில்
விட்டு போவதென்ன காதல்!!

உனக்கும் எனக்கும் இடையில்
இன்னொருவர் எடுத்துச் சொல்ல
நம் காதல் சொல்லும் என்றால்
காதல் வெறும் காகிதகிறுக்கள் தானோ!!

உயிர்க்காதல் மொழியில்லா
கல்லறையிலும் சேர்ந்தே வாழும்
என்றால் !மொழியில்லா உயிர்
உடல் மொழி தேடாதே  அப்போ
உடல்மொழியோ உயிர்க்காதல்!!!

No comments: