மனம்வலிக்க உணர்வு
ஊமையாக தளிர் கொடி
தவிக்கின்றது தனியாய்
உயிரற்ற உடலாகி உறவற்ற
பொருளாகி தெருவோர குடிசைக்குள்
ஓளியற்ற முகமின்றி இருளோடு
கிடக்கின்றது தனியாய்!!
பொய்களும் புகழ்களும் பொன்னாடை
போற்ற உண்மையாய் கிடக்கின்றது
மார்பு மூடிட ஆடையற்று!!
தெருவிளக்கு மின்குமிழ் கூட
கருணையற்றே போனது
அவளுக்கும்!!!!
No comments:
Post a Comment