Wednesday 14 January 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

கார்மேகம் வெள்ளமாய்
மண்ணில் கொட்டி தீர்ந்தாலும்
சூரியன் வானிடம் சிறைபட்டு
போனாலும்
தித்திக்கும் தமிழெடுத்து
பிறந்த இடம் பறிந்த
எதிரியின் முகம் பார்த்து
வாழுமிடமெங்கும் பொங்குக
தமிழே பொங்களாய்......

தோல்விதான் வெற்றியென்று
தெருவெல்லாம் மாவிலைத்
தோரணம் கட்டி!
சிகப்பு வர்ண மாவெடுத்து
வாசலெங்கும் தேசியக் கொடி
கோலமிட்டு!
பானைக்கு கல்லாய் மனதின்
உறுதியை வைத்து
எரிக்கும் தீயாய் எம் உறவை வைத்து
எரிந்த தீப் பொறி கொண்டு!
முத்தமிழலை அரிசியாய்
உலையிலிட்டு! செந்தமிழன்
செங்குருதியை பாலாக்கி
அச்சமும் பயமும் எம்மிடம்
வேண்டாமென பொங்குக
தமிழே பொங்களாய் என்றும்
நாளைய விடியலை நேசித்து

No comments: