நடுவே அழகிய தீவு
அலைகடல் ஓசையில் மலர்ந்திடும்
ஆதவனின் அரவணைப்பின்
உதயமாய் மனிதநேசம்
ஒன்றோடு ஒன்று கலந்திட
பல மொழியின் கதம்பமாய்
கைகள் சிவந்து சிறக்க
உறங்கிடது விழித்திடும்
மீனவன் முச்சுக்குள்
உயிர்சிறக்க
இன்னும் பல காத்துநிற்க !!
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்புற்று
சிந்திக்க செய்திட
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்புற்று
சிந்திக்க செய்திட
சிற்பத்தை
கண்டு வியக்கும்
கண்டு வியக்கும்
விழிகள் ஓவியமாய்
ஒவியத்தை கண்டு மகிழும் தீவுக்குள்
ஒவியத்தை கண்டு மகிழும் தீவுக்குள்
இதயங்கள் தொலைக்கா
காலத்தின் சக்கரம்
மெல்ல மெல்ல கரைய
மெல்ல மெல்ல கரைய
மனிதனின் தேடகளில்
மாற்றங்கள் உதயமாக !
மாற்றங்கள் உதயமாக !
இதயங்களில் மிருகங்கள்
உயிராக
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
விளையாட
இறையாண்மை இரக்கமற்றே
இறையாண்மை இரக்கமற்றே
தொலைய சிதைவுகள்
சிறப்பிடம் பெற்றிட
மனிதன் தன்னைக்கெடுத்து
சரித்திரம் எழுதிட
எதிரியானான்!
எதிரியானான்!
உண்டதை உறங்கியதை
வாழ்ததை மறந்து
வாழ்ததை மறந்து
ஒற்றை தீவுக்குள்
ஒன்பது பிரிவுகள்
ஒன்பது பிரிவுகள்
எழுந்தது தம்மை தாமே அழிந்திட
மென்மைகள் இழந்து
வன்னைகள் உயிர்பெற்று
இருபவரை வெறுத்து
இறந்தவரை நேசித்து
தீவுக்குள் பலதீவுகளாக மனிதம்
தேடுகின்றது உயிரை !!!
No comments:
Post a Comment