Thursday 5 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தாயகத்தின் தென்றல்
காற்றோடு காற்றாய்
காற்றின் திசையெல்லாம்
காற்றாய் கலந்திட்ட என்
உறவின் உயிர்க் காற்றே!!
உங்கள் மூச்சின் வீசை புயலாக்கி
ஒரு தரம் எழுந்து வீசி
மண்ணிலிருந்து எதிரியை
அள்ளி வீசி எங்கள் தேசம்
காத்திட !! ஒரு தரம்
எழுந்து வாருங்கள் எங்கள்
தேசத்திற்காய் நீங்கள்

எங்கும் தீயாய் எரிந்திடும் தீயணைந்து
தீமையின் கொடுமை நிறுத்தி
மண்ணில் இரத்தம் துடைத்து
யுத்தத்தின் தாக்கம் மாற்றி
உறவிற்கு சற்றோ ஒய்வு
கொடுத்து இளைப்பார செய்திட
நீங்கள் மீண்டும் புயலாகி
எங்களுக்காய் எழுந்து வாருங்கள்
இந்த தேசம் காத்திட.......எங்கள்
உறவை காத்திட..............


No comments: