சின்ன சின்ன சந்தோஷமே
ஓரு கண்ணாடியாய்
உடைந்திடும் போது
எங்கே வாழ்வில் பெரிதாய்
தேடிட
சின்ன சின்ன முயற்ச்சியே
தோல்வியாய் திரும்பிடும் போது
எங்கே வாழ்வில் பெரிதாய்
முயன்றிட
சின்ன சின்ன கனவுகளே
கைசோராமல் நழுவிடும் போது
எங்கே கனவுக்குள்
வாழ்வை தேடியெடுத்திட
சின்ன சின்ன புன்னகைப்பே
கண்ணீராய் மாறும் போது
எங்கே வசந்ததை
எதிர்பார்க்க
சின்ன சின்ன நம்பிகையே
கூடிடாதே தோற்றிடும் போது
எங்கே வாழ்வை நம்பி
நடக்க!
சின்ன சின்ன தந்துவமே
இங்கே காத்திடாத போது
இறைவன் எழுதிய விதியின்
உறையை எங்கே தேடிப்படித்திட
சின்ன சின்ன
மனதிற்க்குள்
இல்லையென்னும் கற்பனையே
இருக்கு என்றபொய்யாய்
வாழுது சின்ன சின்னதாய்!!!
No comments:
Post a Comment