வறுமைக்கு பிறந்த
மகளானேன்
வார்த்தைகள் பேசிடா
கவியானேன்
ஊமையின் காதல்
பூவானேன்
உயிர்விட்டு சென்ற
உடலானேன்
உள்ளம் சிதைத்து இதயம் உடைந்த
கண்ணீர்பேசிடும்
கண்களானேன்
வெள்ளிநிலா பார்த்தே பசியை மறக்கும்
குழந்தையானேன்
இழிவுபடுத்தி உயர்வு கொள் மனிதனேடு
பகையுமானேன்
பசம் தந்து பாசங்கு செயது
ஏமாற்றிய வாழும் மனிதனுக்கு
முட்டாளானேன்
இருந்தும் என்னில் ஒடும் வேகம் மட்டும்
மாறவில்லை
இழந்ததை விட்டு அடுத்தது
என்ன என்றே கேட்குது
நம்பிக்கை!!!
No comments:
Post a Comment