Friday, 26 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

 வறுமைக்கு  பிறந்த

 மகளானேன்!



வார்த்தைகள்  பேசிடா 

கவியானேன்!

ஊமையின் காதல் 

பூவானேன்!

உயிர்விட்டு சென்ற 

உடலானேன்!

உள்ளம் சிதைந்த

மெழுகானேன் !

 இதயம் உடைந்த

துடிப்பானேன் !

கண்ணீர்பேசிடும் 

கண்களானேன்!

வெள்ளிநிலா பார்த்தே 

 பசியை மறக்கும் 

குழந்தையானேன்!

இழிவுபடுத்தி உயர்வு கொள்

 மனிதனுக்கு  பகையானேன்!

பாசமென்று   பாசங்கு செய்து

ஏமாற்றி வாழ் மனிதனுக்கு 

முட்டாளானேன்!

 இருந்தும்  எனக்குள்  

ஒடும் வேகம் மட்டும் 

மாறவில்லை என்றும் !

இழந்ததை  விட்டு 

அடுத்தது  என்ன

 என்றே   கேட்கும் 

நம்பிக்கைக்கு  உயிரானேன் !!!


No comments: