Friday 5 May 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................


பெற்ற குழந்தை முகம் பாராமல்

வீசியெறியும்  பெற்றவர் 

உணர்ச்சிக்கு பழியாகும்

குழந்தையின் ஏக்கங்கள்

இல்லாமல்  இல்லையென்ற

உறவிற்கு  அன்னையாகிட

இற்றை நாளில் ஆசை கொண்டேன்

இல்லையென்பரை  இருக்குயென்று

பிச்சைபோடும் கரமாய் இல்லாமல்

கொடுக்கும் கரமாய் மாற்றிடவே

இற்றை நாளில் ஆசைகொண்டேன்

ஒற்றை  உலகில் இருக்கும்

உயிர்கள் அனைத்துமே  ஒன்றை 

உறவாய் ஏற்றம் பெறவே  இற்றைநாளில்

ஆசைகொண்டேன் 

ஆசையேடு ஆசைகள் 

 அலையேடு  இழுத்தே போக 

அனல் மேல் விழுந்த உயிராய்

இற்றைநாளும் ஆனது  எனக்கு



No comments: