நம்மை சிலநேரம்
மற்றவர் புரிந்திட
நம் மரணம் மற்றவருக்கு
தேவைபடுவதைபோல்.
நம்மை நாம் புரிந்திட
ஓரு துரோகி
தேவைப்படுகின்றான்!!
நாம் மற்றவர்
வாழ்வின் தேவையா
ஆயுதமாயென புரிந்திட
ஓரு வறுமை
தேவைபடுவதுபோல்!!
நம்மை நாம்
சொல்லாமல் புரிந்திட
ஒரு இதயம்
தேவைப்படுகின்றது!!
எல்லாத்துன்பத்தையும்
கடக்க!
ஓரு அன்பு
தனிமையை உடைத்தெறிய
தேவைபடுவதுபோல்!!!
ஓரு நிறைவான
சுகம் மிஞ்சும் வாழ்விற்குள்
ஒரு அன்பு தலைகோத
கிடைத்தால்
வாழ்க்கை அனைத்தையும் தாங்கியே
ஜெயிந்திடும்?!!

No comments:
Post a Comment