Sunday 17 April 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 ஒன்றை சொல் ஓன்பது

முறைதோற்றாலும் 

இற்றைக்கு தேவை 

நாம்  உறவேடு  வாழ  ஓன்று

கற்கைகள் கடனாலும்

கற்றபின் நாம் மறந்த  பாதைகள்

நம்மை மறக்காமல் சொல்லும்

நாம் தொலைத்த  தேவை 

ஒன்றென்று!

உச்சத்தை தொட்டாலும்

 நாம்உண்பதை மறந்தாலும் 

பக்கத்தில்நிறுத்தி

அன்பாய்கேட்டிட  

 நமக்காய். தேவை 

ஒன்று

உள்ளங்கள் உண்மையை 

மறைத்தாலும்

கள்ளங்கள்  பள்ளத்தில் 

போட்டாலும்

பக்கத்தில்  வந்து 

 கைபிடித்தே தூக்கிட

தேவை. ஒன்று

உறவுகள் பகையாகலாம்

 நட்புகள்தூரோகங்களாகலாம் 

 சூழல்கள்நம்மையே 

தப்பாக்கலாம் ஆனாலும்

நம்பிக்கையுடன்  நம்மை  தாங்கிட

தேவை ஒன்று

அந்த ஓன்றை மட்டும் 

தொலைத்திட்டு

ஒன்பதை தேடி 

கடசியில் ஒன்றுக்காய்

ஏங்கியே 

மண்ணில் மறைகின்றோம்

ஓன்றுமில்லாமல்!!!

No comments: