நேரமற்ற நேரத்தை
நேசித்தே நேயமெழுதும்
காலத்தின் கவி
காயத்தை வருடும் தென்றலின்
வாசமாம்வீசிடுகின்றது!என்றும்
ஆதவன்தொட்டு உதயம்பெற்று
வெண்ணிலாஓளிபட்டு உயிர்பெற்று
வானவில்கூடைமழையில்
நனைந்தே பூக்கும் பூவானது
தோட்டத்தில்எப்போதும்
கவித்தோட்டத்துகண்ணீர்
புன்னகையின்ரசனையில்
சுவாசத்தில் ஓரு தாலாட்டாய்ச
ஓரு துளி முத்தைப்போல்
ஆழ்கடல் சிப்பிக்குள்
உறங்கிக்கிடக்கின்றது
யாராலும் திருடிட முடியாமல்!!!
தினம்தினம் திசைமாறும் திசையிலும்
ஒற்றை திசை இசையில்
ஓன்றாய் இனைகின்றது நாளும்
எப்போதே பிரிந்திட ்ட சுவாசம்
உயிர்கொடுத்து காத்திடுகின்றது
கற்பனைகவியாய்!!
No comments:
Post a Comment