Friday 1 January 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 வசந்தத்தை தேடி வாசலில்செவ்வந்தி 

உதயம் தோன்றாப்பொழுதில் 

 பூத்திட்ட பூவாய் புன்னைக்க

 பூவிதழ் பூக்காலப் பொழுதின்

 கற்பனைக்குள் !!காத்திருக்கா

  வெண்ணிலாவும்   மறைந்தே போக

 போதும்  போதுமென பூவிற்குள் ஏமாற்றம்

 தேடலின்றி தேடலாய்பூக்க  

 விம்பங்கள் விம்ப விம்மியவிம்மலில்

 பூவும் வாட  கற்பனையென்ற   கண்களில்

 உருவம் உயிரோடு வாழ

பார்த்திட முடியா ஏக்கதோடு 

இருள் சூழும் கனவில்    அவர்அவர் !

அவர் அவர்  பாதையில் 

விழகிட முடியா  பயணத்தில்

கற்பனையும் கனவும் சேர்த்தும் பிரித்தும்

பார்க்கின்ற  வண்ணங்களைப்போல்

இடையில் மாட்டிக்கிட்டவர் சொல்வதே புதிய

கதையாகின்றது  இவ்வுலகில் பூவிற்கு!!



No comments: