Friday 3 July 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்......................

                                                              தாய்மடிகாத்திருக்க

ஒரு சிறப்பு குழந்தை: வளர்ச்சி ...

தவமாய் தவமிருக்கு
உன்னைபோல் ஒர் குழந்தை
பிறக்கா வலியிருக்க 
உன்னைபோல் அழகியை
இறைவன் 
கொன்றதேனோ  தேவதையே!!

சின்னப்பாகத்தின் மென்மையை
காணா கண்கள்  
உன்னை அழித்தே 
 காத்திட துணிந்ததுவோ  
தேவதையே 

 மாயவன் வரமின்றி
மலடி போராட 
காயத்தழும்புக்குள்  இதயமாகி
காத்திருக்கும் பெண்மைக்கு
கிடைக்கா உன் புன்னகையின்
அழகறியா தாய்மை செய்தபாவமென்ன
தேவதையே!! 
உன் அழிவில் நின்மதியான
இதயத்தின் வலிகள் தாங்கி போனாயா
மென்மலரோ மண்னைவிட்டு!!

அழித்தநெடியறியா தாமையோ
காத்திட தாமையும் உள்ளதே இவ்வுலகில்
தேடி பார்த்தேமுடிவெடுத்திடு!!!!

No comments: