Friday 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்...................

அலைதொடும் கரையோரம்
அலைதொடா இடம் தேடி
ஒற்றைமரதனில்  
வாயாடி பெண்னே
என்னடிசெய்கின்றாய் 
தன்னம் தனியே
சொல்லுக்கு சொல்லெடுத்து
சொல்லுபவர் சொல்கேளாதே
வாயாடும் வாயாடிப் பெண்னே 
சொல்லாது
அமர்ந்த காரணம் என்னடி
மௌனமாய்  கடலுறங்க 
அமதியாய் காற்றாட 
சும்மாநிற்கா கவியாய்
சுற்றிதிரிந்தவளே 
சும்மாயிருக்கும் காரணம் என்னடி 
காத்திருபின் விழிகள்
சொல்லிடும் கனவினை கூறடி
கூறிவிட உதடு துடிக்க 
கூடுவிட்டு உயிர்துடிக்க
கூடு விட்டே சென்ற மாமன்
கூடும் காலம்  கதைபேச
குருவிகளேடு  கற்பனையின்
சிறகனை விரித்தே
ஒற்றை கிளியாய்
அலைபேசு மொழிபோல
இதயம் துடிக்க 
தென்றலேடு கதைபேசி
மெளனமானேன்
தோழி!!! 






No comments: