Friday 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன்னை நான் ரசிக்க
என்னை நீ ரசிக்க
இரு துடிப்பு ஒரு
துடிப்பாய் நம்மில்
துடிக்க! உன் உணர்வும்
என் உணர்வும் ஒர்
உணர்வாய் மாற

ஏதோ ஒன்று உள்ளத்தைக்

கசக்க! புரியாத வலி
தெரியாமல் தவிக்க
இரவும் பகலும் இல்லாது போக
இருந்த இரவும் துங்காது விழிக்க
ஒர் கனவு மெல்ல
நினைவாய் தோன்ற
உண்மையோ பொய்யோ என
நாம் எண்ணி எண்ணி
வியந்தே ரசிக்க
ரசித்த நிமிடங்கள் நம்மிடம்
சொல்லிச் சொன்றது
இது தான் காதல் என்று....


No comments: