உதிரங்கள் உறைந்த
வெள்ளக்காட்டிற்குள்
உதயமிழந்த பொழுது!!
உரிமைகள் அழிந்து உயிர்களற்ற
உதயமகன்ற அகதிப்பொழுது!!
உணர்ச்சிகள் எழுந்திட
கார்மேக கூடலுக்குள்
கண்ணீர் துளிகளில்
உதய தாகம்
கொண்ட பொழுது!!
எரிமலை காற்றினை எதிர்த்தே
பயமின்றி சுவாசித்திட்டு
உயரம் தொட்ட பொழுது!!
பாவமென பார்வைகளால் பார்த்திட
மறந்த விழிகளையும் வியப்பில்
ஆழ்த்திய புரட்சிப்பொழுது!!
இருமாப்புடன் நின்றாடியவர்கள்
முன்னே சுழல்காற்றாய்
நின்றாடித்திசைகள்
தொட்ட பொழுது!!
விடியலை தேடியே
விடியலின் வாசலில்
காத்து கிடக்கின்றது
விடியும் பொழுதிற்காய்!!!
No comments:
Post a Comment