Friday 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

அழகாய் ஓர் வீடு அக்கம் பக்கம்
வேலையாட்கள்
பக்கத்தில் நீயும்பார்வைக்கு
 ஓர் உறவாய்


வெளியில் போக வர வாகனம்
என்னைப்
 பலர் திரும்பி பார்த்திட
ஆடை ஆபரணங்கள் தந்து
ஓடி ஓடி நேரமின்றி நீ உழைக்கின்றாய்

யாருமில்லா உணர்வில்

தனிமையாய் வீட்டிற்குள்
ஒர் முலையில் ஏக்கத்தோடு
நான் இருக்க!! காலையில்
ஓர் புன்சிரிப் போடு மறைந்து
இரவில் நான் உறக்கிய பின்
வீடு வந்து சேருகின்றாய்
எனக்குத் தெரியாமல்..

ஊருக்குள் பலர் பராட்டும்
பணக்காரனாய் வாழும் நீ
எனக்கு மட்டும் பாசத்தை
கடன் சொல்லும் கடன்காரனாய்
வாழகின்றாயே என் அன்பே....

No comments: