Friday 26 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யுக யுகமாய் !
உன்னோடு நானும்
என்னோடு நீயும்
வாழ்ந்தாய் ஓர் ஞாபகம்!
என் உள்ளத்தின் உள்ளோ
உள்ளாடி உள்ளாடி
உன்னைத் தேடலின்றி
தேடல் செய்ய
தேடல்லில்லா தேடலின்
விடையாய் எனக்குள் நீ!!
பனியோடும் மழையாய்
அருவியோடும் நதியாய்
என் உருவம் உன்னோடு புதைய
வனத்து வாடமல்லியாய்
தீண்டப்படாமலேயே ஒரு
மொழியில்லா வார்தையால்
கதைபேசியே
நான் பேசுகின்றேன் உன்னோடு
ஊமையாய் ..................

No comments: