Friday 12 July 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,



கரைகடக்கா என் சோகம்
அலை அலையாய் என்
மனசை மெல்ல மெல்ல கரைக்க!!

கரைந்து கரைந்து ஓடும் என்
நினைவு மெல்ல மெல்ல
என் இதயத்தை மீட்ட !

எனக்குள் தொலைந்து தொலைந்து
எழுந்து எழுந்து என்னை எழுப்பியே
ஆழ்கடல் முத்தாய்  எனக்குள் வலிகள்
துடிக்க!

காலெடுத்து கரைசேர கால்வலிக்க
நான் நடக்க 
பேரலையெனையிழுக்க
சிக்கிக்சிக்கித் தொலைந்து தொலைந்து
என்னை நானே 
யாரோவாய்த் தேடித் தேடி
பைத்தியக்காரியாகின்றேன் என்னையே தெரியாமல்…..

No comments: