Sunday 15 June 2008

ஒரு வினாடி..............

தமிழ் சொல் மயக்கத்தில்
வந்த வினை காண்
பலர் வாழ்விலும்
சரித்த நிலையோ!!

கற்பனைகள் பல கண்டு
கனவுகள் சில கொண்டு
உன்னேடு நானிருக்க

ஏதுகை மோனைக்காய்
பக்கத்து பெண்ணவளை
கற்பனையாய் ரசித்து
பொல்லாப் பிள்ளையாரை
துணைக்கழைத்து
சத்தியம் செய்த
பொய்யாக் கவியே..

கவிதையாய் நானிருக்க
என் காதல் மறந்து
ஒரு வினாடி நீ போனதால்
உன்னை மறந்து போகின்றேன்
பல வினாடிகள்....

No comments: