Tuesday 17 June 2008

நதிக்கரையில் ஓர் இரவு....

நதியே..
நீ அழகாய் உறங்க
இயற்கையின் அழகு
உன்னில் விரிய..


சொர்க்கம் கண்முன்னே
வர்ணங்களாய் தெரிய
உன்னிடம் சொல்ல
முடியாமல் தவிக்கின்றேன்
மெளனமாய் நான்...

என் காலடி தடத்தை
சத்தமின்றி பதிந்தேன்
உன் உறக்கம்
கலையாது _ஆனால்
என் கனவை யாரிடம்
சொல்ல....

எத்தனையே அழகு உன்
முன்னே நீயே பார்க்காமல்
உறங்குகின்றாய்!

எனக்காக ஒளி ஏற்றி
ரசிக்க வைத்தவன்
உன்மீது பதியாமல்
போனதென்ன

சின்னதாய் வருத்தும்
அவனைக்காணது என்
மனம் வாடியதை அவனிடம்
கூறிவிடேன்..

No comments: