Tuesday 17 June 2008

காத்திருக்கிறேன்

என் இதயம்
உன் இதயமாய்
காத்திருக்க

என் விழிகள்
உன் உருவத்தை
வாங்கி காத்திருக்க..

என் சுவாசம்
உன் மூச்சுக்காற்றை
சுவாசித்து காத்திருக்க

என் வாழ்கை
உன் நினைவோடு
காத்திருக்க

காத்திருப்பின் அர்த்தம் தான்
எதுவென்று புரியவில்லை



*****

கரைந்திடும் நிமிடங்கள்
கரைவது தெரியாமல்

ஓர் கணப்பொழுது
பல யுகமாய் தோன்ற

மாலைப் பொழு
வந்து வந்து போக

இரவின் வருகை தெரியா
உன் நினைவால்
இதழ் விரிந்த ரோஜாவை
நான்
கையில் ஏந்தி காத்திருக்க

உன் முகம் பார்க்க
எனைப் பார்த்து

என் தோட்டத்து ரோஜா
துடிக்கிறது என் இதயத்தின்
ஒலி கேட்டு

உனக்கு மட்டும் ஏன்
கேட்க்கவில்லை என்
இதயத்தின் ஒலிகள்......

No comments: