Friday 20 June 2008

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

உலகமெங்கும் என் தமிழ்
உயிராய் ஒலித்திட
ஒலிப்பவர் எம் உரிமைதனை
உலகிற்கு சொல்லிட
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

உயிர் மேல் பாதம்தனை
எடுத்து வைத்தாலும்
சரித்திரம் படைத்தவர் நாங்கள்
சரிந்திட மாட்டோமென
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மரணமே எம் கண்முன்னே
வந்து நின்றாலும்
சொல்லிற்கும் செயலிற்கும்
அர்த்தம் இல்லா
வாழ்வை நாம்
வாழ்ந்திட மாட்டோம்!
எம் விடுதலை வேகத்தை
குறைத்திடவும் மாட்டோமெனப்
பொங்கு தமிழேபொங்கு!
எம் உரிமைக்காய்பொங்கு!

மனிதரில் நாமேமாணிக்கம்!
எம்மைக் கண்டெடுத்திடா
உலகமே உன்னை
வெல்லும் வரை
எம் உயிரின்
இறுதிப் பயணம் முடியும் வரை
பொங்கிடுவோம்
தமிழால் பொங்கிடுவோம் என
பொங்கு! தமிழென பொங்கு!!

No comments: