Thursday 24 March 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மறைந்தே போகின்றேன்

இசையே  நீயோ  வரைந்து

பார்க்கின்றாய்

உடைந்தே போகின்றேன்

இசையே. நீயோ செதுக்கி

எடுக்கின்றாய்

தடுக்கிவிழுகின்றேன். 

இசையே நீயோ தூக்கி

சுமக்கின்றாய்

வெறுத்துப் பார்க்கின்றேன்

இசையே  நீயோ தாயாய் 

வருகின்றாய்

கோவம் கொள்கின்றேன்

இசையே நீயோ தொட்டிலாய்

ஆடுகின்றாய்

பிரித்தே பார்க்கின்றேன்

இசையே  நீயோ சுவாசமாய்

வாழ்கின்றாய்!!!


நீ

No comments: