ஆலமர ஆத்தங்கரை
அசையும் பூங்காற்று விழுதோடு
தொக்கியாடிய இளமை
கைகள் கட்டி வேடிக்கை
பார்க்க ஆசைகளை
சொல்லாதேயழைக்கு விழுது
தொலைத்ததை தேடத்துடிக்கம்
ஏக்கம் போல! அக்கம் பக்கம்
ஓய்வாய் யாருமற்று ஊர்
ஏங்கமாய் பார்க்கின்றது
என்னை போல்
யாருமற்று விழுதுகள் அசைந்தாடி
கூப்பிட சந்தோஷத்தில் ஒருநெடி
முதுமையும் மறந்தது
இருந்தும்!
இயந்திர வாழ்வில் சற்றே ஒய்வு
எங்கேயும்
இல்லையே விழுதே!!!
எப்படி மாற்றிவிட்டது நம்மை
காலம்!!!
No comments:
Post a Comment