நியமென்னும் அன்பில்
பொய்யென்னும் நிழல்
கூடவே நடிப்பதை
காலமென்னும்கண்ணாடி
உடைத்திடும் போது தான்
உறவென்னும் அகம்
பிரிவின்றி நிலைக்கின்றது
விழியென்னும் மாயை
திரையென்னும்வண்ணத்தால்
முடிய நியமென்னும் விம்பம்
வலியென்னும் நீரால்
கரைகின்றபோதே
தனிமையென்னும் கை
வெறுமையென்னும்
பக்கத்தில் கற்பனையென்னும்
உலகத்தை காட்டிமறைகின்றது!!!
No comments:
Post a Comment