விழித்திடு தமிழே விழித்திடு
உன்னை வென்றிட விழித்திடு
பகைவர் மண்ணில்பலமின்றி
விழுமுன் விழித்திடு
அடுத்தவர் தூக்கி நம்மையாழும்
காலம் தடுக்க விழித்திடு
ஆச்சி அப்பன் மூச்சுக்காற்று
தெருவில் விழுமுன்விழித்திடு
கண்ணில் பட்ட திசைகள் போன
மண்ணின் தமிழே விழித்திடு
கைகள் தொட்டு கதைகள் பேசி
கருவாய் புதைத்த தமிழே விழித்திடு
கயவன் தொட்டு தலைமையெழுத
கைகள்பற்றி விழித்திடு
சிந்திக்க தவறியே நம் சந்ததி
தம்மை இழக்கும் தழிழே விழித்திடு
மண்ணில் சுவாசம் விடுதலையாக
தமிழே விழித்திடு
உயிரின் நேசம் கொண்டு விழித்திடு
No comments:
Post a Comment