Tuesday 1 February 2022

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 இல்லையென்பதால்  வந்த

ஆசையா

ஏமாற்றதால் வந்த ஆசையா 

அடுத்தவர் காட்டும் 

ஆடம்பரம் தூண்டிய ஆசையா  

நம்மால் முடியுமென்ற 

கற்பனையின்ஆசையா 

ஆசையின் ஆசைகளில் மாட்டி

ஆசையால் வேண்டிய வட்டியும்  

தற்கொலைக்கு தூண்டுதே  ஆசையின்

கொடுமையாய்

 இறப்பு நியமென தெரிந்தும்

இறந்தாலும் பரவாயில்லையென்னும்

பணத்தின் ஆசையால்

கொண்டவன் கொண்டுபோகின்றான்

பல உயிர் பாவத்தை  ஆசையில்

உணர்வானே ஏழையினை 

கொள்ளையடித்தே பெருமை

கொள்ளும் பணத்தின்  ஆசையின்

ஆபத்தின் கருணையினை

வட்டிக்கு வட்டியாய்

உயிரோடு விளையாடுது ஆசையின்

ஆசைகள்!!




No comments: