Wednesday 31 March 2021

விழி கண்டு மொழி பேசும் சாரல். ......................,

 இருந்ததை தொலைந்திட்டு  இருப்பதை

சொந்தமென்று இல்லாத இடத்தில் சொந்ததை

உருவாக்கிட ஆசைகொள்கின்றோம் !!

  எம் அடையலத்தின்அந்திவாரம் அழித்திட்ட இடத்தில்

  கல்லறைகள் கண்ணீர்விடுகின்றது  எம் 

உணர்வற்ற பயத்தில்உருவான விடுதலை 

வாழ்வை நினைத்து!!!

மோதியுடைத்திடென வீரம். விதைக்கபட்ட தம்

நிலத்தில்  எம்மை தவிர அனைத்தும்  வாழ்கின்றது

தமக்கே சொந்தமென்னும்    சந்தோஷத்தில்

தொலைந்தை தேடியெடுத்திட பேச்சை  உணரவாக்கி

தொலைத்தவரையே காத்திட முடியாமல்  தொலைவாய்

நிக்கின்றோம்!

 நமக்கான வாழ்கையின் வசந்ததை  யோசித்தபடி

தேவைகளை உருவாக்கி தேவைகளோடு 

சண்டையிட்டுக்கொண்டு  தேவையேயில்லாத்தை

தேவையென  நேசித்தபடி வாழ்கின்றோம்!! என்றும்

 சொந்தமில்லா முகவரியை எம்  முகவரியாய்  மாற்றி.

  நம் முகவரி இழந்திட்டதை உணராமல்

  மகிழ்ச்சியாய்  வாழ்கின்றோம்  உணர்வற்றே!

திருத்தங்களை திருத்திக்கொள்ளாமலே  

எம் உழைப்பில்பல தேசங்களை உயர்த்திட 

போராடியபடி நம் தேசம்மறத்தே 

 அடிமைகளாய்வாழ்கின்றோம்  நமக்கே தெரியமல்



No comments: