எங்கே !இவள் மாமன்!!
இங்கேஇவள் காத்திருக்க
இளமை தொலைந்திருக்க
முதுமை உடலை தொட்டிருக்க
தொலைவில் ஓரு செய்தி
தொலையாமல் காதோரம்
கேட்டிருக்க
இருவிழி இரவோடு
தவமிருக்க
தலையோடு வெண்பனி
பூத்திருக்க
அலைமோதும் ஆசைகள்
அலையாதே கூன் விழுந்து
வில்லாக வளைந்திருக்க
விடியலில் மாமன் வந்திடுவானென
உதயத்தைத்தேடி இவள்
உயிரைக் கைபிடித்தே
காத்திருக்கின்றாள்!!!
மல்லிகையும் மணமிழக்க
ரோஜா இதழ்சுருங்க
உயிர்தெரியா காகிதப்பூப்போல!!!
.jpg)
No comments:
Post a Comment