Wednesday 18 March 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம் சுற்றியவில்லுக்குள்
சுயநலமாய் தேடுது இதயம்
தனக்கானதை

ஒற்றை முகம் ஒருமுறை
Bildergebnis für ரோஜாஎனக்காக வந்தென்னை
தொட்டணைக்க கூடாதா


கடசிநிமிட  மகிழ்ச்சியில்
தலைகோதிதலைசாய நீயாக
 மாறிடக் கூடாதா

விட் டிடும் காற்றில்  கலந்திடும்
சுவாசத்தை நீயாக
சுவாசித்திடக் கூடாதா

தனிமை சுவருடைத்தே இனிமை
சிதையென்றை உந்தன்கைகள்
எனக்காக தந்திடக் கூடாதா

சிறையின் கதவினை திறந்து
உந்தன் தீயின் சுவாலையில்
கறைந்திட எனக்காக நீயிருந்திட கூடாதா!!!

No comments: