Sunday 24 May 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

வனதில் நின்று கொண்டு
கற்பனை மலர்களை
 கையிரண்டிலும்அள்ளிக்கொண்டு
நீருக்குள் வர்ணகோலங்களை
போட்டுக்கொண்டு காத்திருந்தேன்
என்றாவது சந்தோச மழைத்துளிகள்
நந்தவனத்தை அமைத்திடுமென்று!
கொஞ்சம்கொஞ்சமாய் கற்பனைகள்
உதிர்ந்து கையிரண்டும் காயங்களாய்
போன பின்பு புரிந்தது
பாலைவனக் கோலம்போட்டு
காணல்நீருக்குள் நிற்பது!!

No comments: