Tuesday 19 May 2015

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..3

அலையென வந்து  உயிர்மூச்சினை

அள்ளியெடுத்து  உடல்தனை
மணலென வீசி சென்ற அலையிர்களின்
பாதசுடுகளுக்கு !!ஓர் மலர்வணக்கம்!



??????????????????????????????????????


நட்சத்திர வான்நிலா முற்றத்து

தமிழின் உயிர்யொடுத்து
உடலினை உரமாக்கி
உதிரத்தை அள்ளிகுடித்து
மரணதேசத்தில் விதைக்கபட்ட
உறவுகளின் உயிரின்அழுகுரல்
ஆன்மாவிற்கு !இதயகாயத்தால்
மலர்வணக்கம்!!


???????????????????????????????????????
உதிரத்தை சந்தணமாய் பூசி

அக்கினியில் குளித்து
அனல் காற்றாய் கலந்து
எம் இருள் வாழ்விற்கு
நட்சத்திரப் பூவாய் ஒளிர்கின்ற
எம் மாவீரத் தியாங்களுக்கு!
மலர்தூவி !மனம்வாடி! பணிகின்றோம்
உங்கள் மலர்பாதம் தனை!

No comments: