Sunday 24 May 2015

நிலவோடு ஓர் சாரல்,

ஒருநாள் என்னோடு
நிலாப்பொழுது தன்னோடு
ஊதக்காற்று பேசாத
கடக்கரை மண்ணோடு
எட்டியோடா  நிலவொளியில்
தாலாட்டும் அலையோடு
நீயும் நானும் அமர்ந்து
 கதைபேச வேண்டும்!!!

அப்படியும் இப்படியும்
புரியாது புலம்பும் மனிதனெல்லம்
தொலைத்திட்ட நாளுக்காய்
ஏங்கவேண்டும்!!!

கூடும் உறவு கூடிடஒர்நாள்
தேடவேண்டும்
கொள்கையில் பித்தனும்
கொள்கையின்றி அலைபவனும்
கொள்கையொடு ஓர்வாழ்வு
தேடவேண்டும்!!

புரிந்திட தேடுபவரும் புரியாது
தவிப்பவரும் இதுதான் வாழ்கையென்று
புரிந்து கொண்டு வாழவேண்டும் நம்மைப்போல்:

No comments: