Monday, 31 August 2026

விழியேடு மாமன் மொழி பேசும் சாரல்.......................

ஆற்றோரம்  அருவி காற்றாட  



தோப்புக்குள்  சோடிகிளிகள் 

காதல் கூத்தாட !

 ஒற்றையில்  போன மக 

நெஞ்ச்சுக்குள் மாமன் நினைப்பு 

நெருஞ்சி  முள்ளாய்  குத்த 

அருவி ஓசை  வந்து   காதோடு 

 காதல்  பேசவில்லை 

தென்றல்காற்று இசையாகி 

பாட  தூண்டவில்லை 

தழுவியேடும்  கிராமத்து 

இசைகள்  காதோடு  கதைகள் 

கூறவில்லை  அவள் நிற்க 

கால் தழுவிய  நீரும் 

முட்டிமோதிய  மீனும் 

அவளின்  உணர்வோடு  விளையாட 

அழைக்கவில்லை  

அனாலும்  அவள்  விழிகள் 

மட்டும்  மாமனை  தேடுது 

தானாய் !!நெஞ்ச்சுக்குள் 

அவள்  பூட்டிவைத்த  நினைவுகள் 

அவள்  விழிகள்  தேட பேசுது 

அவளோடு !!


No comments: