Monday, 10 August 2026

நட்பின் சாரல்.............,

 தேடுது கண்கள்  



அவனைப்போல் 

ஒரு ஆணை  

கோடி கொடுத்தாலும் 

கிடைக்காது  போடி 

என்கின்றதிமிரில் 

என்னை  கண்டுகொள்ளாமல் 

அவன் 

கொஞ்சம் மறந்து

 விட்டவன் போல் அவன் 

சந்தோசமாக  இருந்தாலும் 

எங்கோ  தொலைத்த 

சின்ன சின்ன சந்தோஷத்தை 

தேடும்  குழந்தையாய் 

என்னை  தேடுவான்  !!

அப்போதும்  கோவம் மறந்து 

நான்  சொல்லும்  சோகத்தை 

முகம் சுழிக்காமல் 

மீண்டும் கேட்பான் 

புதிதாய் கேட்பது போல் 

நடித்தே !!இருக்கும் போதும் 

விழும் போதும் விலகினாலும் 

வலிக்கும்  நேரத்தில் 

சொல்லாமல்  புரிந்த உறவு 

எப்போதும்  அவன்  தான் !!!


No comments: