கருணைக்கொலை
செய்கின்றதுபண்பாட்டுக்கோமணம் !
சரிந்து விழுந்தப்பூவிற்கு
தெரிந்த முள்ளே !!
எழுந்து பேசுகின்றது
தமிழ் மானத்தை !!
கேட்டுக்கேட்டு
சலித்துத்போன
வார்த்தை தான் பெண்ணுக்கும்!
சொன்னாலும்
புரியாது விழுந்தே
அழும் கொடுமைகள்
தான் அதிகம்
இறைவனுக்கும் சலித்ததுபோனது
ஒற்றை உணர்வால் படும்
படுகேவலங்களை பார்த்து
பார்த்து ! இறைவனும்
அழுகின்றான்
ஆண்மையின்
தேடலும் விளையாட்டும்
சரியும் சரிவிற்குள் விழுந்தே
கிடைப்பதால் !!
முற்களின் விஷத்தில் பூக்களும்
காலகாலமாக விழுந்தே திருந்திடாமல்
அழுவதால் இறைவனும்
படைப்பை நினைத்து
அழுவதே வாழ்க்கையென
ஓரமாய் வாழ்கின்றான் !

No comments:
Post a Comment