அவள் விழிகள் அழுது
உறங்கிடாதே தவிக்குது
அவன் மரணித்தால் !
அவள் வலிகள்
தோல்களின்றி அழுகின்றது
அவன் மரணித்தால்!
அவள் கைகள் பற்றிடாது
தவித்தே அழுகின்றது
அவன் மரணித்தால் !
அவள் இதயம்
ஆசைகளை இழந்து
அழுகின்றது
அவன் மரணித்தால் !
அவள் மனசின் கனவுகள்
புதைந்தே அழுகின்றது
அவன் மரணித்தால் !
அவன் மரணம் அவளை
மரணிக்கும் மரணமானது
அவள் வாழ்க்கைக்குள்!!!
No comments:
Post a Comment