Friday, 13 December 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 சட்டென கண்னில்  

பதடுத்தெறித்த  செய்தி 

உண்மையோ  பொய்யோயென 

நினைத்திடமுதல்  விழுந்ததுதுளி

மண்ணை  விட்டுச்செல்லும் 

உயிர்தான்   நிறுத்திட முடியா 

உயிர்தான்  ஆனாலும் 

பிரிவுகள்  நிரந்தரமாகும் போது 

வலிப்பதும்  உண்மையே 

தமிழ்  வந்து  காதோடு 

விளையாட  சொல்லோடு 

உறவாடும்  உறவே நீர் 

உச்சரிக்கும்  தமிழின் அழகு

நான் கற்றுக்கொள்ள  தவறிய 

பிழையென  ஒத்துக்கொண்டே 

ரசித்த  முல்லை  வாசம் நீர் 

 அந்தவாசம்  மாறறு  மண்ணில் 

வாழும் தமிழ் வாசம்  தான் 

இருந்தாலும்  நினைவுக்குள் 

தொலையும்  உம்  நினைவு 

பேச  முல்லைப் பூகள் கொண்டு  

என்  நீரால்  அஞ்சலி  செய்கின்றேன் !!!!


  

No comments: