Thursday, 28 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 பொய்யானவர்களிடம்  

உரிமையோடு 

சண்டைபோட்டு  பார்  

அவர்கள் உறவையே   

தூக்கியெறிந்தே  செல்வார்கள்

அவர்கள்  உன்னை 

நேசிப்பதைப்போல்  

நடிப்பதும்  புரியும்

அவர்கள்  உரிமையில்லா 

உறவில்  வாழவே 

பல  உறவுகளை தேடியோடிக்கொண்டே 

வாழ்வார்கள்  

ஓன்றை  நேசிப்பதன் 

அர்த்தங்கள்  பல 

மனிதர்களின்  பொய்கள் 

கற்றுத்தருவதில்  புரிகின்றது !!!

நான் தேடும்  அன்பு 

எந்த  பொய்யான  இதயத்திலும் 

பூக்காது !!!1

 

 

No comments: