Thursday, 28 November 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 புரியாமல்  

விலகிப்போகின்றவர்களிடம் 

விளக்கங்கள்  வீண் 

சுமையென  சுகம்

  தேடியோடுகின்றவர்களிடம் 

கை  நீட்டி  கை பிடிக்க 

கடன்  கேட்பது  வீண் 

காதலும்  இல்லாமல்  

பாசமும்  இல்லாமல் 

வேஷம்போட்டு  நடிப்பவர்களிடம் 

உண்மையை  உரைப்பது வீண் 

காலம்  காத்திருக்கின்றது !!

பூக்களில் பூசப்படட 

வர்ணத்தின்  மேல்  மழைத்துளியாய் !!!




No comments: