அவள் புன்னகைகளை
கேட்டிடும் இதயங்களுக்குதெரியவில்லை
அவள்
புன்னகைக்குள் மறைந்துள்ள
பொய்யில்லாமுகம்
அவள்கனிவான பேச்சுக்களை
ரசித்திடும் இதயங்களுக்கு
தெரியவில்லை
அவள்
மௌனங்களுக்குள் மறைந்துள்ள
பொய்யில்லாமுகம்
அவள்
சொல்லும் பொய்களை
ரசிப்பவருக்கு தெரியவில்லை
அவள்
உண்மையான முகம்
அவள்
ரசனைகளை தொலைத்து
நடிப்பது
அவளை புரிந்தவருக்கும்
புரியவில்லை அவள்மற்றவர் மகிழ்ச்சிக்காய்
நடிப்பது
அவள் வாழும் வரை
யாருக்குமே புரிந்திட
போவதில்லை! ஏனனில்
அவள்
இறைவன் எழுதி
புரியாமல் தூக்கி எறிந்த
புத்தகம் !!!
.jpg)
No comments:
Post a Comment