Tuesday, 22 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 நம்மை !



பலர்  பலவிதமாய் 

காயபடுத்திக்கடந்திருப்பார்கள்!

நாம்!

 நம்மை  திரும்பி  பார்க்காமலேயே 

சட்டென கடந்திட முயற்ச்சி

செய்வோம்! ஆனால் 

நாம்!

நம்பிய ஒருவர் ஏற்படுத்தும்

காயமே நம்மை கடந்திடாமல்

நிறுத்திவிடுகின்றது !

நம்  பலவினமே 

நம்மை யாரும் ஏமாற்றி 

காயப்படுத்திட நம்மை 

கொடுக்கும்  !!   ஆனால் 

நம்மை!

நம்பவைத்து  ஏமாற்றும் 

நம் நம்பிக்கையாவரே

நம்மை!

 அதிகமாய் பலவினமாக்கி 

விடுகின்றனர்!!

கைபிடித்து கூட நடந்திட ஒரு

நம்பிக்கை துணை 

துணையாக வரும்போது

நம் பலவினம் கூட பலமானதாய்

மாறுவிடும்!!

 நாம்  யாருமற்று 

தனியாய் நிற்கும் போதே  

நாம்  நம்பலவினம்   

பலர் கை பொம்மையாய்

மாறிவிடுகின்றோம்  !!

நம்மை காயபடுத்தியே

வாழத்துடிப்பவருக்கு அறியாவலியே

நம்மிடம் நாமே இழக்கும்  வலி!!!

ஓன்றுக்குள் ஓற்றைவைத்தவன்

ஓன்றையெடுக்கும் போதே

ஒன்றைவிழ்த்திடுகின்றான்  !

உண்மை புரியாமலேயே !!!பலர்

தன்னையே தரையில் போட்டு சொல்கின்றனர்!!!


No comments: