Tuesday 6 February 2024

விழி கண்டு மொழி பேசும் சாரல்

 மீண்டு எழுத்திடு மகளே

நீவேண்டுமென்றே நான்

வரம் இருக்கின்றேன் !!!

காலம் கடத்தபோதும்

கண்மணியே கனவில் கூட

 உன்னை   மறக்கவில்லை 

உன்னை!!!

விதியின் விளையாட்டால்

உன் அண்ணன்

கோவம் கொண்டதால் 

நீ இன்று  அவன் கையில் 

வரமாய்யாகின்றாய்!

நான் வாசம் தொலைத்து

உனக்குள் உறக்கம் கொண்டதால்

இன்று 

அண்ணன் கையில் நீ

பூவாய் ஏழுகின்றாய்!!!நான்

உனக்குள் உயிராய் 

 அவன் கையில்  விழுகின்றேன்!!

உன் அண்ணன் உன்னை 

கைகளில் ஏந்த   நான் 

உன்மொழி மௌனம் ஆகின்றேன் !!

நான்தோற்றுப்போன 

பெண்மை

நீ ஜெயிக்கவாழும் 

பெண்மை!!

நீயில்லாமல் வாழ்கின்றாய் 

நான்  இருந்தும் 

இல்லாமல் வாழ்கிறேன்

இருவர் நிலையும் ஒன்று 

உனக்குள் நானும் 

எனக்குள் நீயும்

நிழலாய் இருப்போம் என்றும்।




No comments: