சொல்லும் சொல்லில் இல்லை
அன்பு
கூப்பிடும் உறவில் இல்லை
அன்பு
பேசும் வார்த்தையில் இல்லை
அன்பு
உனக்குள் எனக்குள் இல்லை
அன்பு
சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்
போனாலும் வலிக்கும் போது
அருகே வந்து காக்கும் இதயங்களிடம்
இருக்கின்றது அன்பு ஒற்றை
தாய் உலகை வென்றாள் அந்த
அன்பால் அன்று!!!
No comments:
Post a Comment