Thursday 22 February 2024

குட்டிக்குட்டிச் சாரல்

 சொல்லும் சொல்லில் இல்லை

அன்பு 

கூப்பிடும் உறவில் இல்லை

அன்பு 

பேசும் வார்த்தையில் இல்லை

அன்பு 

உனக்குள் எனக்குள் இல்லை

அன்பு

சொல்லாமல் பேசாமல் கூப்பிடாமல்

போனாலும் வலிக்கும் போது

அருகே வந்து காக்கும் இதயங்களிடம்

இருக்கின்றது அன்பு   ஒற்றை

தாய் உலகை வென்றாள்  அந்த

அன்பால் அன்று!!!





No comments: