நியமென நினைத்து
நிழல்களின் நியங்களையே
நியமாய் காதல்
செய்கின்றோம்
நியமில்லா நிழலென
உணரும்போதே
வலிகள் வெறுப்புகளாய்
மாறுகின்றது!!!
நியமென நினைத்து
நிழல்களின் நியங்களையே
நியமாய் காதல்
செய்கின்றோம்
நியமில்லா நிழலென
உணரும்போதே
வலிகள் வெறுப்புகளாய்
மாறுகின்றது!!!
ஆண்மையே !!!
உன்னை கொஞ்சம் நீயே
சிந்தனை செய்வாயா!!!!
குடும்பம் காத்திடும் நல்
தலைவனானவனே
உன்
கடமையை கொஞ்சம்
சிந்தனை செய்வாயா!!!
பெண்மையை பாதுகாக்கும்
பாதுகாவலனே
உன்
ஆண்மையைக்கொஞ்சம
சிந்தனை செய்வாயா!!!
வீரத்தின் வேங்கையாவனே
வீரமிற்குள் ஓழித்திருக்கும்
உன்
கருணையை கொஞ்சம்
சிந்தனை செய்வாயா!!!
தோற்றயிடமதில் கைபிடித்தே
தூக்கிடும் தோழனானவே
உன்
நல்லிதயத்தை கொஞ்சம்
சிந்தனை செய்வாயா!!
தாய்மைக்கு தாயாய்யானவனனே
அந்த தாயைக்காத்திடும்
உன்
தாய்மை கொஞ்சம் சிந்தனை
செய்வாயா!!!
இழிவுகள் படுத்தும்
இலக்கணப்பிழைகளில் விழுந்தவனே
உன்
இலக்கியத்தை கொஞ்சம்
சிந்தனை செய்வாயா!!
அன்பில் தேற்று அன்பைப்பெற்று
அன்பை கொடுக்கும் குடுபத்தில்
உன்
விம்பகண்ணாடியை கொஞ்சம்
சிந்தனைசெய்வாயா!!!!
இங்கே! உண்ர்வுகளை கொலை
செய்பவர்கள்
அதிகம் !!
உணர்வுகளை புரிந்தவர்கள்
உறவானால் நம்மை விட
அதிஷ்டசாலிகள் யாருமில்லை
மண்ணில்!!
நமக்கான மகிழ்ச்சி
நம்மை புரிந்தவரிடமே அதிகமாய்
தோன்றும்!!!
நம் வாழ்வியல்
தடமாறுகின்றது
நாம் புரியாமல்நம் வயது தடையற்று
புன்னகைகின்றது
சரியென
நம் வரலாறு மாறுகின்றது
நம்மில் குறைகளை
சுமத்திக்கொண்டு
நாம் தலையசைக்கின்றோம்
தவறுகளை நம்பிக்கொண்டு
நம்மை தொலைத்திடாதே
காப்பது நம்
முதுமையின்
முகவரியென முதுமைக்கே
சொல்லாத காலம் !!!
தென்றல் தொட்டு
இட்ட முத்ததில்பனித்துளிகுளியலுக்குள்
இதழ் சிவந்த பூவினைக்கண்டு
சூரியன் பருகியது
பனித்துளியை !!!
என் உயிரில்
உயிர் வாழும் வரை
என்னை மட்டுமே
நினைவேடும் கனவேடும் சுமந்தே
உயிரைவிட்ட உயிர்
விடைகொடுத்திட முடியாமல்
என் ஏக்கங்களில்
வாழும் விதியின்
முதல் பரிசு! என் அண்ணா
யாரும் தந்திட முடியா
அன்பு பரிசும் அவன் !
எனக்கான உயிரில் உயிராகி
உயிரேடு உயிரைக் கட்டியே
உயிருக்குள் கலந்தே உடனிருந்தே
எனக்கான ஆசைகளை
தனக்கான ஆசையாய் சுமந்தே
எனக்காக வாழந்த உயிர்! என் அப்பா !
விடைகொடுத்திட முடியா
கண்ணீர் துளியாய் விழும் விதியின்
இராண்டாவது பரிசு!!
என்னுள் உயிர்பெற்று
எனக்கே தாயாகி
என்னை தன்னுள் சுமந்த
உயிரின் உயிர்பூ
அழகின் ரசனையாய்
என் கிறுக்கல் பேசும் அழகான
மொழியின் காதலாய்
இசைக்குள் வாழும் ஸ்ரங்களாய்
உயிரைப்பிரித்தாலும்
பிரித்திடமுடியா காலமாய்
உயிரில் மறைந்த
பிரிவாய் எனக்குள்
வாழும் என் விம்பம் என் மகள் !
நெஞ்சத்தில்உ றங்கியே
என்னை உறங்கிட வைத்த
விதியின் மூன்றாம்பரிசு !!
காலத்திடம் தேற்ற
கடிகாரமாய்
என்னிடம் தேற்று
என்னை தேற்கடித்தே
விதியிடம் அடகுவைத்தே
விதியிடம்தொலைத்த உயிர் என்
மாமன் ! விதியின் நான்காவது பரிசு
கடசிவரை பேசாமலே
கைபிடித்து கண்ணீர்துளியால்
விடைபெற்று
வாசலில் காக்க வைத்தே
சொல்லாமல் சென்ற
விதியின் விதி !!
கடந்திடா கருணையற்ற
காயங்கள்
போலியாய் என்னை வரைந்தே
தேற்கடித்தத விதியாயிடம்
நான் கேளாமலே கிடைத்த பரிசுகள்!
என்வாழ்வில் யாரும் நிரந்தரமில்ல
நியாங்கள் !!!!
வீசும் காற்றில்
சிக்கிக்கொண்ட
ஓற்றைப்பூ இது. !
பற்றிக்கொள்ளபக்கமில்லாவெட்டவெளியில் மாட்டிக்கொண்ட
ஒற்றைப் பூ இது !!
அச்சம் கொஞ்சம்
பயமும்கொஞ்சம் கொண்டு
தடுமாறிடும் ஒற்றைப்பூ இது !!
வேகம் கண்டு விவேகம்
இழந்து பயந்து
தவிந்து தடுமாறியே
விழுந்த ஒற்றைப்பூ இது !!!
வேகம் பட்ட காயத்திற்கு
மாமான் கையால்
மருந்தை பூசிக்கொண்ட
மரணம்ப்பூவிது!!
காலத்தை கடந்து
கயவரையறிந்தும்
தீயிற்க்குள் தன்னை
சுட்டபூவிது !!
கொஞ்சம் மெளனித்திட
து
போதும் காயமென்று!!!
பிள்ளைகள்!!
தன் தாயிக்காவும்தந்தைக்காவும்போராடினால்
அது அறிவின் முதிர்ச்சி!!!
பிள்ளைக்காக போராடிய
தாயும் தந்தையும்
தனிமை சிறையென்னும்
முதியோர் இல்லத்தில் வாழ்ந்தால்
அது அறிவின் வளர்ச்சி!!
கல்வாரிக்கற்களை
நடைபாதை பாதம் தாங்க
முற்களின் கூர்மையை
இதயம் தாங்க
சொற்களின் கல்லை
மனசின் ஏடுகள் தாங்க
காயத்தின் உதிரத்தின்
வண்ணமாய்
விழுந்தால் பாவை!!
ஒன்றை சொல் ஓன்பது
முறைதோற்றாலும்
இற்றைக்கு தேவை
நாம் உறவேடு வாழ ஓன்று
கற்கைகள் கடனாலும்
கற்றபின் நாம் மறந்த பாதைகள்
நம்மை மறக்காமல் சொல்லும்
நாம் தொலைத்த தேவை
ஒன்றென்று!
உச்சத்தை தொட்டாலும்
நாம்உண்பதை மறந்தாலும்
பக்கத்தில்நிறுத்தி
அன்பாய்கேட்டிட
நமக்காய். தேவை
ஒன்று
உள்ளங்கள் உண்மையை
மறைத்தாலும்
கள்ளங்கள் பள்ளத்தில்
போட்டாலும்
பக்கத்தில் வந்து
கைபிடித்தே தூக்கிட
தேவை. ஒன்று
உறவுகள் பகையாகலாம்
நட்புகள்தூரோகங்களாகலாம்
சூழல்கள்நம்மையே
தப்பாக்கலாம் ஆனாலும்
நம்பிக்கையுடன் நம்மை தாங்கிட
தேவை ஒன்று
அந்த ஓன்றை மட்டும்
தொலைத்திட்டு
ஒன்பதை தேடி
கடசியில் ஒன்றுக்காய்
ஏங்கியே
மண்ணில் மறைகின்றோம்
ஓன்றுமில்லாமல்!!!
நீயெழுதி நான் தேற்ற கற்பனையில்
நான் விழுந்து எழுந்த நியம்
நீ காட்டா கற்பனையை நியமாய்
காட்டியது வாழ்க்கையாய்!!!
நம் உணர்வில்
சேர்ந்த உறவுஉயிர்வரை வாழ்கின்றது
நம் உயிரில்
சேர்ந்த உறவு
யென்மங்களை தேற்கடிக்கின்றது
நம் அறிவில்
சேர்ந்த உறவு
அடிக்கடி மாறுகின்றது!!!
அங்கிகாரம் பெற்றிடும் போதே
மனிதன் தன்னை உயர்த்திட
இன்னும் உழைக்கின்றான்
அங்கிகாரம்
கிடைக்காத போதே
மனிதன் தன் திறமையை
இழக்கின்றான் மனிதனின் திறமையை
மதியுங்கள் தன்நம்பிக்கை தானாய்
பிறக்கும் சாதனைகள் நம் இனத்தை
உயர்த்தும்!!!
கலந்தாய்
கண்ணீரின் சந்தோஷத்தை
கருணை வடிவத்தில்
தேடவைத்தாய்
கண்விழித்து கேட்பதை
கண்ணெடுத்தும் பாராமல்
கற்சிலையாய் நிற்கின்றாய்
ஓய்ந்தே போனது மனசு
இருந்தும் தேய்ந்த நிலவாய்
நானும் கேட்கின்றேன்
உன்னிடம் ஒன்றை
நீயே திரும்ப திரும்ப
திரும்பமலேயே
என்னைப் பார்க்கின்றாய்
அன்பின் வடிவமானவளே
கொஞ்சம் என்னையும்
பார்கலாமே கண்ணிறங்கி
கனவில் கதை கூறும்
கற்பனைகள் புரியா
கற்பனையான என்னை
உந்தன் கனவில்
காட்டிடா நியத்தில்
திரும்பி பார்
இந்த நிழலின்
நியமும் புன்னகைக்க!!!!!
கவியாய் புதைக்கப்பட்டதால்
தான் கற்பனையாய்வாழ்கின்றேன்!!
இங்கே புதைந்ததும்
என்னை மறப்பதால் தான்
உயிரேடவாசமானேன்
யாரே தேடும்போதுதான்.
என் சிறக்கு
வலிக்கின்றது!!!
மற்றவர்கள் தவறுகளிலிருந்து
என் விம்பத்தை பார்க்கின்றேன்
என் தவறுகளிலிருந்து என்னுள்
பெண்மையை தேடுகின்றேன்
மாமனேட தோல்சாய்ந்து
வானத்து நிலவேடு
உறவாடிய நிமிடங்கள்
கார்காலகாற்றாகி
மழையேடு கரைந்து தான்
ஓடியதோ!!
வடிந்தோடிய நீர்போல்
படித்திருக்கு நெஞ்சக்குழிக்குள்!1
அச்சாரல் பட்டதால்
முத்தாரம் கேட்ட
முகத்தோரம் இன்னும் கொஞ்சம்
மிஞ்சிக்கிடக்கும்சிகப்பழகு
கண்குழிக்குள் பூக்கின்றது
மாமன் நினைப்பாகி!
மாமன் மூச்சோரத்தென்றலின்
வெப்பத்தில் என் கூந்தல்
காய்ந்த நாட்களை
நானும் தோற்றாடி தொலைத்ததாய்
சொல்லுதே கரு வானம்!!
மாமன் கையேடு கைப்பிடிக்குள்
பூத்திட்ட காதல் பூவிற்கே
வெட்கம் வர !!
காலத்தின் காவியத்தில்
விதியென்று எழுதியதே மாயத்தை
மண்ணில் உயிர் வாட
மரணம் மாலைபோட
காகிபூவிற்கு1
வண்ணம் தொலைத்தைபோல்
தொலைந்தது கனவுக்காதல்!!!!
நேரமற்ற நேரத்தை
நேசித்தே நேயமெழுதும்
காலத்தின் கவி
காயத்தை வருடும் தென்றலின்
வாசமாம்வீசிடுகின்றது!என்றும்
ஆதவன்தொட்டு உதயம்பெற்று
வெண்ணிலாஓளிபட்டு உயிர்பெற்று
வானவில்கூடைமழையில்
நனைந்தே பூக்கும் பூவானது
தோட்டத்தில்எப்போதும்
கவித்தோட்டத்துகண்ணீர்
புன்னகையின்ரசனையில்
சுவாசத்தில் ஓரு தாலாட்டாய்ச
ஓரு துளி முத்தைப்போல்
ஆழ்கடல் சிப்பிக்குள்
உறங்கிக்கிடக்கின்றது
யாராலும் திருடிட முடியாமல்!!!
தினம்தினம் திசைமாறும் திசையிலும்
ஒற்றை திசை இசையில்
ஓன்றாய் இனைகின்றது நாளும்
எப்போதே பிரிந்திட ்ட சுவாசம்
உயிர்கொடுத்து காத்திடுகின்றது
கற்பனைகவியாய்!!
ஓன்றைவார்த்தை பேசிட
ஊமை தவமிருப்பதுபோல்
நானும் தவமிருந்த காலம்
தவம்பெற்றபோதே பூவும்
பெறாந்தா தவக்காலம் நியமானது!!!
நீயெறிந்த கல் இன்று
பலர் கையில் அன்றும்
காயத்தை தாங்கிக்கொண்டே
மெளனமாய் நடந்தேன்
இன்றும் தாங்கிக்கொண்டே
நடக்கின்றேன் மெளனமாய் !!!
தன்னோடு தன்னை பூட்டி
மண்ணேட தண்ணீரைப்போல்
மெண்ணேட வாழ்வின் ஈரம்
மரணத்தோடு முடிவடைகின்றது!!
கண்ணீரதுடைத்திட
கைகளுக்காய் ஏங்கியதுண்டு
வறுமைபோக்கிட ஒரு நாள்
வருமானெ காத்திருந்ததுண்டு
கருணையற்ற இதயமென கடித்தவரையும்
கருணையாய் காத்ததுண்டு
காலதை தொலைத்தும்
காலமாறதமோதும்
காயங்களால் துடித்திட்டபோதும்
என்னையே வெறுத்த
என் பயணத்தில்
தெரியாமல் அறியாமல்காயபட்டவர்
நினைத்தே வருந்தியதுண்டு
என்னை நினைத்து வருந்தியதில்லை
காலம் கடந்து
நடந்திட முடியாநிலை தடுமாற
என் விழியேனே தனக்காய்
மட்டும் அழுகொண்டே உறங்கி விழிக்கின்றது!!!
நம்மை சிலநேரம்
மற்றவர் புரிந்திட
நம் மரணம் மற்றவருக்கு
தேவைபடுவதைபோல்.
நம்மை நாம் புரிந்திட
ஓரு துரோகி
தேவைப்படுகின்றான்!!
நாம் மற்றவர்
வாழ்வின் தேவையா
ஆயுதமாயென புரிந்திட
ஓரு வறுமை
தேவைபடுவதுபோல்!!
நம்மை நாம்
சொல்லாமல் புரிந்திட
ஒரு இதயம்
தேவைப்படுகின்றது!!
எல்லாத்துன்பத்தையும்
கடக்க!
ஓரு அன்பு
தனிமையை உடைத்தெறிய
தேவைபடுவதுபோல்!!!
ஓரு நிறைவான
சுகம் மிஞ்சும் வாழ்விற்குள்
ஒரு அன்பு தலைகோத
கிடைத்தால்
வாழ்க்கை அனைத்தையும் தாங்கியே
ஜெயிந்திடும்?!!
ஓரு முறையல்ல பல முறை
தண்டிக்கபட்டபின் தான்
வாழ்க்கை கண்ணீருக்கு
சொந்தமானது
ஓரு முறையல்ல
பலமுறை ஏமாந்த பின்னர்
தான் மரணம் நியமென
புரிந்தது
இது ஏனென தெரியதபோதுதான்
நம்பிக்கை கைநழுவி
உடைந்தது
யாரின்மேலும் பிழையில்லை
என் பிறப்பே
பிழையென தோன்றியபின்னர்
தனிமை சிறையே வாழ்வானது!!!!
இப்போ எது இருந்தாலும் போனாலும்
நான் நடக்கின்றேன் தேற்றபின்னும்
நியாயமாய்